வாள்வெட்டு
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் யாழில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்!!!

Share

மீண்டும் யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை – துன்னாலை தக்குசம்பாதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை(10) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது- 27) என்பவரே வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வடக்கிற்கு ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தனது முதலாவது செயற்றிட்டமாக வாள்வெட்டுக்குழுவை ஒடுக்குவது தான் எனவும் யாழில் ஒன்று வாள்வெட்டுக்குழுக்கள் இருக்க வேண்டும் இல்லாவிடில் நான் இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கிற்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்ற பின்பு வாள்வெட்டுத்தாக்குதல்கள் , குழுத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...