1990535 20
செய்திகள்இலங்கை

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா? மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு!

Share

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர் தகவல் வெளியான நிலையில், குழந்தையின் தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தை காரணமாகக் குழந்தையின் தந்தை சந்தேகம் எழுப்பியதால், தற்போது காவல்துறையினர் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, ஆறு மாத ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்தது.

மனைவியின் தொலைபேசியைச் சோதனை செய்தபோது, அதில் தவறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததைக் கணவர் கண்டறிந்துள்ளார். மேலும், அவரது மனைவி ஓரினச்சேர்க்கையில் தவறாக நடந்துள்ளதும் தெரியவந்தது.

இதனை அடுத்து, குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், குழந்தையின் உடலை நாளை (நவம்பர் 9) தோண்டி எடுத்து மறு பிரேதப் பரிசோதனை செய்து விசாரணை நடத்தக் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீழ்ச்சியடையும் கல்வித் தரம்: முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து,...

26 695661e2a824f
செய்திகள்அரசியல்இலங்கை

மில்கோ நிறுவன வரலாற்றில் சாதனை இலாபம்: ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார் அமைச்சர் லால்காந்த!

இலங்கையின் மில்கோ (Milco) நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக உயர்ந்த இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக விவசாய,...

images 1
செய்திகள்இந்தியா

இந்தியாவிற்கு வருகிறது BTS! மும்பையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ஆர்மி ரசிகர்கள் உற்சாகம்!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), தங்களின் உலகளாவிய இசைப் பயணத்தின் (World...

gun shooting 1
செய்திகள்அரசியல்இலங்கை

2025-ல் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: 60 பேர் பலி – பொலிஸார் அதிரடித் தகவல்!

கடந்த (2025) ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன்,...