canada usa
செய்திகள்உலகம்

கனடா – அமெரிக்கா எல்லையில் திடீர் பதற்றம்!!

Share

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு எதிராக வாகன சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்குத், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று அரசின் அறிவிப்பிற்கெதிராக கனடாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கனரக வாகன சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என தங்களை அழைத்துக்கொள்ளும் அவர்களுக்கு, அண்மைய நாட்களாகவே ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், இவ்வார இறுதியில் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் மத்திய பகுதியில் போராட்டம் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளன்னர்.

அமெரிக்கா – கனடா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து கனரக வாகன சாரதிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற நடைமுறையினை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளுமே நடைமுறைப்படுத்தியிருந்தன.

இருநாட்டு அரசின் அறிவிப்பிற்கெதிராக முன்னெடுக்கவுள்ள வாரயிறுதிப் போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை வெளியாவில்லை.

இப்போராட்டமானது மிகப்பெரிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்துமென அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரையில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...