canada usa
செய்திகள்உலகம்

கனடா – அமெரிக்கா எல்லையில் திடீர் பதற்றம்!!

Share

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற அறிவிப்புக்கு எதிராக வாகன சாரதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கனடா-அமெரிக்கா இடையிலான எல்லையைக் கடப்பதற்குத், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்று அரசின் அறிவிப்பிற்கெதிராக கனடாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கனரக வாகன சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என தங்களை அழைத்துக்கொள்ளும் அவர்களுக்கு, அண்மைய நாட்களாகவே ஆதரவு அதிகரித்துவரும் நிலையில், இவ்வார இறுதியில் கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் மத்திய பகுதியில் போராட்டம் நடாத்துவதற்கும் தீர்மானித்துள்ளன்னர்.

அமெரிக்கா – கனடா இடையிலான எல்லையைக் கடப்பதற்கு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து கனரக வாகன சாரதிகள் கட்டாயம் கொவிட் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென்ற நடைமுறையினை அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளுமே நடைமுறைப்படுத்தியிருந்தன.

இருநாட்டு அரசின் அறிவிப்பிற்கெதிராக முன்னெடுக்கவுள்ள வாரயிறுதிப் போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் இதுவரை வெளியாவில்லை.

இப்போராட்டமானது மிகப்பெரிய போக்குவரத்து பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்துமென அதிகாரிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் இதுவரையில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...