சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட ஆறு இளைஞர்கள், ஞாயிற்றுக்கிழமை (01) பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மொறட்டுவை, மாத்தறை, பாயாகலை, வங்கதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ் (Ice), போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. புனித தலங்களுக்கு யாத்திரை என்ற பெயரில் போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்ய அல்லது பயன்படுத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
சந்தேகநபர்களை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (02) முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிவனொளிபாத மலை பருவகாலத்தில் ஏற்படும் குற்றச்செயல்களைக் குறைக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை நல்லத்தண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். யாத்திரை தலத்தின் புனிதத்தைக் காக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை தொடரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழும் கண்டனம் – தமிழர்தாயகம்.