9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

Share

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர், தன்னை விடுவிக்கக் கோரித் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உரிய கடவுச்சீட்டு இன்றி தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து அவர் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி சிறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அந்த இளைஞருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், அவர் எந்தவித நிபந்தனைகளுக்கும் இணங்க மறுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

முன்னதாக இவருடன் மேலும் நான்கு பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நாமக்கல் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த இளைஞனுக்குத் தனது தாயகம் (இலங்கை) திரும்ப விருப்பம் இல்லை என்பதால், அவரை நாமக்கல் மையத்திற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துள்ள அவர், தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னைக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் மற்றும் இந்தியத் தரப்புடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இளைஞரின் உடல்நிலை மற்றும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...