மொட்டு கை
செய்திகள்அரசியல்இலங்கை

‘மொட்டு’டன் இணைந்து போட்டியிடாதிருக்க சு.க. யோசனை!

Share

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் இன்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான நெருக்கடியை மக்களுக்கு எடுத்துரைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும் அரசிடம் பங்காளிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...