மொட்டு கை
செய்திகள்அரசியல்இலங்கை

‘மொட்டு’டன் இணைந்து போட்டியிடாதிருக்க சு.க. யோசனை!

Share

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் இன்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்தத் தீர்மானத்தை முன்வைத்தது.

இது தொடர்பான இறுதித் தீர்மானம் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான நெருக்கடியை மக்களுக்கு எடுத்துரைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும் அரசிடம் பங்காளிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...