tamilni 135 scaled
செய்திகள்விளையாட்டு

ரோகித் சர்மாவின் இரட்டை சாதனை

Share

ரோகித் சர்மாவின் இரட்டை சாதனை

அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா சதம் கடந்ததன் மூலம் உலக சாதனை ஒன்றை தன்வசப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 273 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – இஷான் கிஷன் ஜேடி சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது.

தொடக்கம் முதலே அதிரடியை துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா, 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் அவர் 63 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித்தின் 31வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் எடுத்தவர்கள் பட்டியலில் ரிக்கி பொண்டிங்கை பின்தள்ளி தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் இரு இடங்களில் சச்சின் (49 சதம்), விராட் கோலி (47 சதம்) ஆகிய இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல், உலகக் கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் (63 பந்துகள்) அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

இதுவரை கிறிஸ் கெயில் அடித்த 553 சிக்ஸர்களே உலக சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் சர்மா முறையடித்தார்.

84 பந்துகளில் 131 ஓட்டங்களை எடுத்திருந்த ரோகித், ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....