செய்திகள்விளையாட்டு

சொதப்பலான துடுப்பாட்டம் – தொடரை இழந்தது இலங்கை!!

spt01
Share

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் சொதப்பலான துடுப்பாட்ட வரிசையால் தோல்வியடைந்ததுடன் தொடரையும் இழந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் தசுன் சானக அதிகபட்சமாக ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் தினேஸ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கேன் ரிச்சர்ட்சன் மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

121 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

அதனடிப்படையில் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3 – 0 என்ற ரீதியில் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...