rtjy 357 scaled
செய்திகள்விளையாட்டு

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

Share

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களாக அறியப்படும் ரிக்கி பொண்டிங், ஹன்சே குரோனியே, ஸ்டீவ் வாஹ், விராட் கோலி, டோனி ஆகியோரின் நிலையை முறியடித்து ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைவனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் தலைவராக அவரது நூறாவது போட்டி ஆகும்.

தனது நூறாவது போட்டியில் 87ஒட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியை 100 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக ரோஹித் சர்மா காணப்பட்டார்.

இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் சர்மா தலைவனாக நூறு போட்டிகளில் 74 ஆவது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் தலைவனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் தலைவனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

1.ரோஹித் சர்மா – 74 சதவீதம்

2.ரிக்கி பொண்டிங் – 70.5 சதவீதம்

3.ஆஸ்கார் ஆப்கன் – 69.6 சதவீதம்

4.ஹன்சே குரோனியே – 67 சதவீதம்

5.ஸ்டீவ் வாஹ் – 66.6 சதவீதம்

இந்திய அணியின் தலைவனாக இருந்தவர்களில், விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடனும் டோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...