rtjy 357 scaled
செய்திகள்விளையாட்டு

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

Share

உலகின் சிறந்த கிரிக்கெட் அணி தலைவராக ரோஹித் சர்மா

உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர்களாக அறியப்படும் ரிக்கி பொண்டிங், ஹன்சே குரோனியே, ஸ்டீவ் வாஹ், விராட் கோலி, டோனி ஆகியோரின் நிலையை முறியடித்து ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டி, ரி20 என மூன்று வித கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கு மேல் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைவனாக களமிறங்கினார். அது சர்வதேச போட்டிகளில் தலைவராக அவரது நூறாவது போட்டி ஆகும்.

தனது நூறாவது போட்டியில் 87ஒட்டங்கள் பெற்று இங்கிலாந்து அணியை 100 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கிய காரணமாக ரோஹித் சர்மா காணப்பட்டார்.

இந்த வெற்றியுடன் சேர்த்து ரோஹித் சர்மா தலைவனாக நூறு போட்டிகளில் 74 ஆவது வெற்றியை பதிவு செய்தார். இதன் மூலம் தலைவனாக 74 சதவிகித வெற்றியை பதிவு செய்து நூறு போட்டிகளுக்கும் மேல் தலைவனாக இருந்தவர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

1.ரோஹித் சர்மா – 74 சதவீதம்

2.ரிக்கி பொண்டிங் – 70.5 சதவீதம்

3.ஆஸ்கார் ஆப்கன் – 69.6 சதவீதம்

4.ஹன்சே குரோனியே – 67 சதவீதம்

5.ஸ்டீவ் வாஹ் – 66.6 சதவீதம்

இந்திய அணியின் தலைவனாக இருந்தவர்களில், விராட் கோலி 213 போட்டிகளில் 135 வெற்றிகளை பெற்று 63.38 சதவீதத்துடனும் டோனி 332 போட்டிகளில் 178 வெற்றிகளை பெற்று 53.61 சதவீதத்துடனும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...