rtjy 77 scaled
செய்திகள்விளையாட்டு

மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா வெற்றி

Share

மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா வெற்றி

உலக கிண்ண தொடரின் 39ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலின் அற்புதமான இரட்டை சதத்தினால் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

மும்பையில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் 129 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட்களை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது. 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என அந்த அணி தத்தளித்த நிலையில் மேக்ஸ்வெல் காப்பாளனாக மாறினார்.

மிரட்டலாக அவர் சதம் விளாசிய நிலையில் தசைபிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய அவர் 195 ஓட்டங்களில் இருந்து சிக்ஸர் அடித்தார்.

இதன்மூலம் அவர் இரட்டைசதத்தை எட்டியதுடன், அவுஸ்திரேலிய அபார வெற்றியை பெற்றது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...