23 649afaf0399d6
இலங்கைசெய்திகள்விளையாட்டு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீராங்கனை

Share

இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவினை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு நேற்று(26) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வாராந்த முதல்நாள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து இடம்பெற்றது.

இதன்போது குறித்த வீராங்கனைக்கு மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உதவி மாவட்டச்செயலர் திருமதி.H.சத்தியஜீவிதா மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் நினைவுக் கேடயத்தை வழங்கி மதிப்பளித்திருந்தார்.

குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில், இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வீராங்கனையினை வரவேற்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரனிடம் ஆசியினை பெற்றதுடன், தொடர்ந்து மாகாதேவா ஆச்சிரமம் முன்றலில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...