1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

Share

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) ஆகிய அணிகள் தமது நீண்டகாலச் சொந்த மைதானங்களிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2025 தொடரில் ஆர்.சி.பி முதன்முறையாகச் செம்பியன் பட்டம் வென்றதைக் கொண்டாடியபோது, பெங்களூருவில் ஏற்பட்ட சன நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அவப்பெயர் காரணமாகவே அணி நிர்வாகம் சின்னசுவாமி மைதானத்தைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தை இதுவரையில் ஆர்.சி.பி அணுகவில்லை. அதற்குப் பதிலாகச் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மைதானத்தை ஆர்.சி.பி தனது புதிய தளமாக மாற்ற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர், 2025 தொடரின் போது அணி மீது ஆட்ட நிர்ணய (Match-fixing) குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டால் ஏற்பட்ட முறுகல் நிலையே மைதான மாற்றத்திற்குக் காரணமாகும்.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்திலிருந்து வெளியேறி, 2026 போட்டிகளை மகாராஷ்டிராவின் புனே (Pune) மைதானத்தில் நடத்த ராஜஸ்தான் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புனே மைதானமானது ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்குத் தற்காலிகத் தளமாக இருந்துள்ளது. ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் இந்த அதிரடி மாற்றங்கள் அந்தந்த மாநில ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...