தமிழ் திரையுலகில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு 18 கிலோ உடல் எடையைக் குறைத்தது எப்படி என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஷ்ரத்தா ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அந்த வாழ்க்கை முறை குறித்து அவர் கூறியதாவது.
சட்டத்துறையில் பணிபுரிந்தபோது நல்ல சம்பளம், நினைத்த உணவை உண்ணுதல், சுற்றுலா என மிகவும் ஜாலியான வாழ்க்கை முறையை அவர் கொண்டிருந்தார்.
அப்போது உடல் பருமன் அதிகமாக இருந்தபோதும், தான் அழகாக இல்லை என்றோ அல்லது மற்றவர்களை விடத் தாழ்ந்தவர் என்றோ அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. தாராளமாகத் தனக்குப் பிடித்த ஆடைகளை அணிந்து மகிழ்ந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட மாற்றத்தினால் தனது உடலை ஆரோக்கியமாக மாற்ற ஷ்ரத்தா முடிவெடுத்தார் முதலில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார்.
படிப்படியாக 15 நிமிடங்கள் என உயர்த்தி, ஒரு கட்டத்தில் ஓய்வின்றித் தொடர்ந்து 40 நிமிடங்கள் ஓடும் அளவுக்குத் தனது உடல் வலிமையை (Stamina) வளர்த்துக் கொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, அவர் சுமார் 18 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
உடல் பருமன் என்பது மன உளைச்சலுக்கான விஷயம் அல்ல என்றும், முறையான பயிற்சியும் விடாமுயற்சியும் இருந்தால் யாராலும் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தனது பேட்டியின் மூலம் ரசிகர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.