உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

MediaFile 4 2

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் முறுகல் நிலை தற்போது விளையாட்டுத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாடப் போவதில்லை என பங்களாதேஷ் எடுத்துள்ள தீர்மானம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பிரதிநிதி ஒருவரை பங்களாதேஷிற்கு அனுப்ப ஐசிசி திட்டமிட்டிருந்தது.

குறித்த பிரதிநிதி இந்திய நாட்டவர் என்பதால், அவருக்கு விசா வழங்க பங்களாதேஷ் அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்தச் சிக்கலான சூழலில், ஐசிசி ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் அண்ட்ரூ எஃப். கிரேட் (Andrew F. Great) இன்று (17) டாக்கா நகருக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் தங்களது அணி விளையாடுவது பாதுகாப்பானது அல்ல எனக் கருதும் பங்களாதேஷ், அந்தப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. போட்டி அட்டவணைகள் மற்றும் ஏற்பாடுகள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய நிலையில் போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற முடியாது என ஐசிசி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இந்த இராஜதந்திர மற்றும் விளையாட்டு ரீதியான மோதல், எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிகரமான நடாத்துகைக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. அண்ட்ரூ எஃப். கிரேட் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளின் பின்னரே பங்களாதேஷின் அடுத்தகட்ட நகர்வு குறித்துத் தெரியவரும்.

 

 

Exit mobile version