Djokovic
விளையாட்டுசெய்திகள்

ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் இரத்து செய்தது அவுஸ்திரேலியா!-

Share

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் திங்கட்கிழமை மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில், கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரது விசாவை இரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்தனர்.

இந்தநிலையில், அவுஸ்திரேலிய ஒபனில் பங்குபெற்றுவதற்கு அனுமதிக்குமாறு கோரி டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் மெல்போர்னில் உள்ள பெடரல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணை முடிவில் ஜோகோவிச் விசாவை இரத்து செய்த அவுஸ்திரேலிய அரசின் முடிவை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

ஆனால், குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தனது தனிப்பட்ட அதிகாரத்தினைப் பயன்படுத்தி விசாவை இரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் குடியேற்ற அமைச்சர் அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் இரத்து செய்துள்ளார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...

03 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைப்பு!

க.பொ.த (உயர்தரம்) தேர்வில் சித்தியடைந்தும், இடப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத...

02 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பிரசாத் ரணசிங்க, இலஞ்ச...

01 9
செய்திகள்இந்தியா

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடி: ‘அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை’ அமல்படுத்தியது மத்திய அரசு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க,...