செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

15 scaled
Share

ஐபிஎல் 2025: 10 அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள்

இந்திய ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கு முன்னர் ஒவ்வொரு அணியும், தாம் எத்தனை வீரர்களை தக்க வைத்துள்ளன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளன.

சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், சில அணிகள் குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்துள்ளன.

இதன்படி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, ருதுராஜ்க்கு 18 கோடி, மதீச பத்திரனவுக்கு 13 கோடி, சிவம் துபேக்கு 12 கோடி, ஜடேஜாவுக்கு 18 கோடி, மஹேந்திர சிங் தோனிக்கு 4 கோடி ரூபாய்களை வழங்கி அவர்களை தக்க வைத்துள்ளது.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விராட் கோலி, ரஜத் பட்டிதர் மற்றும் யாஸ் தயாள் ஆகிய மூவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக விராட் கோலிக்கு 21 கோடி ரூபாயும், ரஜத் பட்டிதர்க்கு 11 கோடி ரூபாயும், யாஸ் தயாளுக்கு 5 கோடி ரூபாய் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு 18 கோடி, சூர்யகுமார் யாதவ்வுக்கு 16.35 கோடி, ஹர்திக் பாண்டியாவுக்கு 16.35 கோடி, ரோஹித் சர்மாவுக்கு 16.30 கோடி, திலக் வர்மாவுக்கு 8 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் ரிங்கு சிங்குக்கு 13 கோடி, வருண் சக்கரவர்த்திக்கு 12 கோடி, சுனில் நரைன்னுக்கு 12 கோடி, ரஸலுக்கு 12 கோடி, ஹர்சித் ராணாவுக்கு 4 கோடி, ரமன்தீப் சிங் 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில், பெட் கம்மின்ஸ்ஸ_க்கு 18 கோடி, அபிசேக் சர்மாவுக்கு 14 கோடி, நிதிஸ் ரெட்டிக்கு 6 கோடி, ஹென்ரிச் கிளாசன் 23 கோடி, டிராவிஸ் ஹெட் 14 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்ட அடிப்படையில் அவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்ஸில், ரசித் கான் 18 கோடி,சுப்மன் கில் 16.50 கோடி, சாய் சுதர்சன் 8.50 கோடி, ராகுல் தேவாட்டியா 4 கோடி, சாரூக்கான் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரான்னுக்கு 21 கோடி ரூபாய், ரவி பிஸ்னாய்க்கு 11 கோடி ரூபாய், மாயங் யாதவ்வுக்கு 11 கோடி ரூபாய்,,மோசின் கானுக்கு 4 கோடி ரூபாய், ஆயுஸ் பதோனிக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்ஸில் சஞ்சு சம்சன்னுக்கு 18 கோடி ரூபாய், ஜெய்ஸ்வால்லுக்கு 18 கோடி ரூபாய், ரியான் பராக்க்கு 14 கோடி ரூபாய், துரூவ் ஜூரல்லுக்கு 14 கோடி, சிம்ரன் ஹெட்மயருக்கு 11 கோடி. சந்தீப் சர்மாவுக்கு 4 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாசாங் சிங் 5.5 கோடி, பிராப்சிம்ரன் சிங் 4 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கெபிட்டல்ஸ் அணியில் அக்சர் பட்டேல் 16 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கும், குல்தீப் யாதவ் 13 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 கோடி ரூபாய்க்கும், அபிசேக் போரெல் 4 கோடி ரூபாய்;க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...