செய்திகள்விளையாட்டு

20 வருடங்களின் பின் மோதும் இந்தியா – அவுஸ்திரேலியா

tamilni 270 scaled
Share

20 வருடங்களின் பின் மோதும் இந்தியா – அவுஸ்திரேலியா

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பல பரிட்சை நடத்துகிறன.

50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இறுதிப்போட்டியாக இந்த போட்டி அமையப்பெற்றுள்ளது.

குறித்த போட்டியானது இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த போட்டியில் நடப்பு தொடரில் விளையாடிய 10 போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை பெறாத அணியாக இந்திய அணி முன்னேறியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை தகுதிகான் சுற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியை தழுவிய நிலையில் எனைய போட்டிகளில் அனைத்திலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அவுஸ்திரேலிய அணி இதுவரை 8 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது.

இந்த தொடர்களில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

இந்திய அணியை பொருத்தமட்டில் 5 ஐசிசி கோப்பைகளை இதுவரை வென்றுள்ளது.

இந்நிலையில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் 13 போட்டிகளில் மோதி இருக்கிறன.

இதில் இந்திய அணி 5 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா அணி 8 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன.

இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் 150 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதில் இந்திய அணி 57 போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...