rtjy 158 scaled
செய்திகள்விளையாட்டு

ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்! அதிரவிட்ட வீரர்

Share

ஆறு பந்துகளுக்கு ஆறு விக்கெட்டுக்கள்! அதிரவிட்ட வீரர்\

அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்டின் பிரீமியர் லீக் பிரிவு கிரிக்கெட் போட்டியில், அணி ஒன்று இறுதி ஓவரில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி, போட்டியில் வெற்றி பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

முட்கீரபா அணிக்கு எதிரான போட்டியில் சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 179 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில், இறுதி ஓவரில் 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 5 ஓட்டங்களே தேவைப்பட்டன.

எனினும் முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன், இறுதி ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, சாத்தியமில்லாத வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தாம் இறுதி ஓவரில் பந்துவீச ஆரம்பித்த போது, போட்டியின் நடுவர், போட்டியில் வெற்றி பெறவேண்டுமானால், ஹெட்ரிக் ஒன்றையாவது எடுக்க வேண்டும் என்று முட்கீரபா அணியின் தலைவரிடம் வேடிக்கையாக கூறியுள்ளார்.

எனினும் 6 பந்துகளில் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பின்னர், அந்த நடுவர் தம்மை வியப்பாக நோக்கியதாக முட்கீரபா அணித்தலைவர் கரேத் மோர்கன் தெரிவித்துள்ளார்.

குறித்த 6 விக்கெட்டுக்களில் 4 விக்கெட்டுகள் பிடி எடுக்கப்பட்டும், இருவர் போல்ட் முறையிலும் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இறுதி விக்கெட்டு வீழ்த்தப்பட்டபோது, சேர்ஃபர்ஸ் பெரடைஸ் அணி, 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

முன்னதாக தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தமது அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் பட்டியலில், 2011 இல் நீல் வாக்னர், 2013இல் பங்களாதேஸின் அமின் ஹூசைன் மற்றும் இந்திய கர்நாடக அணியின் அபிமன்யு மிதுன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64ddc497a7984
செய்திகள்இலங்கை

காலி மாவட்டத்தில் 30 மணிநேர நீர் விநியோகத் தடை: நாளை முதல் அமுல்!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 20) முதல் 30 மணிநேர நீர் விநியோகத்...

25 68f4bb8d53816
செய்திகள்இலங்கை

ரஃபா மற்றும் தெற்கு காசாவில் தாக்குதல்கள் தொடர்ச்சி; வடக்கு காசாவில் பலி

இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும்...

2.1 2
செய்திகள்இந்தியா

இலங்கையின் சிறைச்சாலைகளில் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைப்பு

இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் தற்போதைக்கு சுமார் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்...

PoliceOfficerRepImage750
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள் அதிகரிப்பு!

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...