rtjy 77 scaled
செய்திகள்விளையாட்டு

மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா வெற்றி

Share

மேக்ஸ்வெல்லின் இரட்டை சதத்துடன் அவுஸ்திரேலியா வெற்றி

உலக கிண்ண தொடரின் 39ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெலின் அற்புதமான இரட்டை சதத்தினால் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

மும்பையில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 291 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் 129 ஓட்டங்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி விக்கெட்களை தொடக்கத்திலேயே பறிகொடுத்தது. 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என அந்த அணி தத்தளித்த நிலையில் மேக்ஸ்வெல் காப்பாளனாக மாறினார்.

மிரட்டலாக அவர் சதம் விளாசிய நிலையில் தசைபிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய அவர் 195 ஓட்டங்களில் இருந்து சிக்ஸர் அடித்தார்.

இதன்மூலம் அவர் இரட்டைசதத்தை எட்டியதுடன், அவுஸ்திரேலிய அபார வெற்றியை பெற்றது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....