236410520 198286172350925 6733220571755494107 n
விளையாட்டுசெய்திகள்

பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி

Share

பி.எஸ்.ஜி. அணியில் இணைந்தார் பிரபல வீரர் மெஸ்ஸி

பிரபல கால்பந்து வீரர் பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் 34 வயதான லயோனல் மெஸ்சி, ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.

தனது 13ஆவது வயதில் பார்சிலோனா கிளப்பில் இணைந்த மெஸ்சி தொடக்கத்தில் ஜூனியர் அணிக்காகவும், 17-வது வயதில் இருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காகவும் அடியெடுத்து வைத்தார்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்தார். பார்சிலோனா அணிக்காக லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலக கோப்பை உள்பட 35 பட்டங்களை குவித்ததில் முக்கிய பங்காற்றினார்.

தனது கடைசி காலம் வரை பார்சிலோனா குடும்பத்திலேயே இணைந்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவரை பார்சிலோனா கிளப் வெளியேற்றியது. இதனால் 21 ஆண்டு கால பார்சிலோனா உடனான அவரது பந்தம் முடிவுக்கு வந்தது.

கடுமையான நிதிநெருக்கடியில் தவிக்கும் பார்சிலோனா கிளப், வீரர்களின் ஊதிய உச்சவரம்பில் புதிய மாற்றங்களை கொண்டு வந்ததன் காரணமாக அடுத்த 5 ஆண்டு கால ஒப்பந்தம் தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 50 சதவீதம் ஊதியம் குறைக்க மெஸ்சி முன்வந்தபோதிலும் பலன் இல்லை.

‘பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி வரை அந்த அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் அளித்திருக்கிறேன். ‘பார்சிலோனாவுக்கு குட்பை’ சொல்வேன் என கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. உண்மையிலேயே பார்சிலோனாவை விட்டு பிரிவதற்கு கடினமாக இருக்கிறது’ என்று கூறி மெஸ்சி தேம்பி தேம்பி அழுதார்.

இந்த நிலையில் மெஸ்சி, பார்சிலோனாவில் இருந்து விடைபெற்ற அடுத்த 2 நாள்களில் புதிய கிளப்பில் இணைந்துள்ளார். பிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதை அவரது தந்தை ஜார்ஜ் நேற்று உறுதிப்படுத்தினார். புதிய ஒப்பந்தப்படி மெஸ்சிக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.305 கோடி ரூபா ஊதியமாக கிடைக்கும்.

இதே கிளப்பில் தான் பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார், பிரான்சின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே விளையாடி வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணி கைகோர்த்து பி.எஸ்.ஜி. அணியின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை கனவை நனவாக்கும் என்பது அந்த கிளப்பின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
arrest 1200px 28 08 2024 1000x600 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ரூ. 8 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு மதுபானம்: 69 போத்தல்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்து,...

bb70ef27 25f3 4d2d aac2
உலகம்செய்திகள்

மசகு எண்ணெய் கடத்தல்: ஈரானுக்கு உதவிய வெனிசுலா கப்பல் நிறுவனம், 6 கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடை!

கரீபியன் கடற்பகுதி வழியாக ஈரானுக்கு மசகு எண்ணெய் கடத்திச் செல்ல உதவியதாக வெனிசுலா மீது குற்றம்...

National Strategy child sexual abuse
உலகம்செய்திகள்

இலங்கைப் பிரஜை மீதான சிறுமி கடத்தல், துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள்: மேற்கு லண்டன் நீதிமன்றில் மறுப்பு!

மேற்கு லண்டனில் உள்ள அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட புகலிட விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 20...

articles2FxGu0xvsmkR7xnWvm5gj0
செய்திகள்விளையாட்டு

மறுநாள் ஜோன் சினாவின் கடைசி WWE போட்டி: குந்தரை எதிர்கொள்கிறார் ஜாம்பவான்!

மல்யுத்த வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான WWE ஜாம்பவான் ஜோன் சினா, தனது புகழ்பெற்ற இரண்டு...