235990044 200681745444701 2377461218185862087 n
விளையாட்டுசெய்திகள்

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சிஜெ உய்ஜாவுக்கு தற்காலிகத் தடை!!

Share

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சிஜெ உய்ஜாவுக்கு தற்காலிகத் தடை!!

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ரிலேவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரித்தானியா தடகள வீரர் சிஜெ உய்ஜா (CJ Ujah) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறினர் என நான்கு விளையாட்டு வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று தடகள ஒருமைப்பாடு பிரிவு அறிவித்துள்ளது.

மொராக்கோவின் ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் பந்தய வீரர் சாதிக் மிகோவ், ஜார்ஜிய ஷாட் புட்டர் வீரர் பெனிக் அப்ரமியன், கென்ய sprinter Mark Otieno Odhiambo மற்றும் பிரித்தானியா sprinter CJ Ujah ஆகிய நால்வரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரித்தானியா அணி வீரர்கள் நான்கு பேரில் CJ Ujah ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஓகஸ்ட் 6ஆம் திகதி நடந்த ஆண்கள் 4×100 மீட்டர் ரிலேவில் இத்தாலி அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது, பிரித்தானியா அணி 2ஆவது இடம் பிடித்து வெள்ளியும், கனடா அணி 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு வீரர்களுக்கு எதிரான ITA சர்வதேச சோதனை முகமை முடிவுக்கு காத்திருக்கின்றோம் என்று தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து வீதி மீறல்கள் நடந்துள்ளனவா மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ITA தீர்மானிக்கும்.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகள் அல்லது நடத்தை விதிமுறைகளின் கீழ் நடத்தப்படும் விசாரணையில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த நான்கு வீரர்களும் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து விதிகளை மீறியது உறுதியானால், பிரித்தானியா ரிலே அணி வெள்ளிப் பதக்கங்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3ஆவது இடத்தை பிடித்த கனடாவுக்கு வெள்ளிப் பதக்கமும், நான்காவது இடத்தில் உள்ள சீனாவுக்கு வெண்கலமும் வழங்கப்படும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...