சாரதி அனுமதிப்பத்திரங்களின்
செய்திகள்இலங்கை

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!

Share

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்துக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்குப் பாதுகாப்பான முறைகள் கொண்ட கணினி மென்பொருள் ஒன்றை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு, தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு ஒரு வருட காலம் செல்லுபடியாகும் புதிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை உரிமையாளருக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலைமை சீரானதன் பின்னர் உரிய அட்டை அச்சிடப்பட்டு விண்ணப்பதாரரின் வீட்டுக்கே நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுப்பிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...