இந்தியா காஸ்மீர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 பேர் வேறு மாநிலச் சிறையொன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஸ்மீரில் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்க உடந்தையாக இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படும் நிலையில், அவர்கள் காஸ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காஸ்மீர் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 26 பேரை அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மாற்றம் செய்யப்படுபவர்கள் உத்தரபிரதேச ஆக்ரா மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
#india