இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் (Palash Muchhal) இடையேயான திருமணம் திடீரென நிறுத்தப்பட்ட விவகாரம், தற்போது பலாஷ் முச்சலின் ‘துரோகம்’ குறித்த தகவல்களால் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மிருதி மந்தனாவுக்கும், பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் திகதி சாங்லியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. சங்கீத் நிகழ்ச்சியின்போது ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது.
தற்போது, பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ இணையத்தில் பரவி வருகின்றன. திருமணக் கொண்டாட்டங்களின்போது, அங்கே இருந்த ஒரு பெண் நடன இயக்குனருடன் பலாஷ் முச்சல் நெருக்கமாக இருந்ததாகவும், அதுவே திருமண நிறுத்தத்திற்கு உண்மையான காரணம் என்றும் வதந்திகள் உலா வருகின்றன.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பலாஷ் முச்சல், ஸ்மிருதியிடம் சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன.
தந்தையின் உடல்நிலைக்காகத் திருமணம் தள்ளிப்போனது என்றால், கொண்டாட்டப் புகைப்படங்களை ஏன் நீக்க வேண்டும்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட்கள் உண்மையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ‘ரெட்டிட்’ போன்ற சமூக வலைதளங்களில் இது குறித்துக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ரசிகர்கள், “உலகக் கோப்பையை வென்று தந்த ஒரு வீராங்கனைக்கு இப்படி ஒரு நிலைமையா?” என்று பலாஷ் முச்சலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தந்தையின் உடல்நிலை ஒருபுறம், காதலர் மீதான சர்ச்சை மறுபுறம் என ஸ்மிருதி மந்தனா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.