DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

Share

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை 9.45 மணியளவில் பயங்கரத் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.

காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தீயே, இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்புப் பிரிவு வருகை தந்து தீயை அணைக்க முயற்சித்த போதிலும், அது கட்டுக்கடங்காமல் பரவியது.

அங்கு குழுமியிருந்த பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இந் நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தினால் காட்சியறை முழுமையாக எரிந்து சேதமாகியுள்ளது. சேத விபரம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...