அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- மூவர் பலி

body

body

அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில், 2 தபால் அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டை நடாத்திய நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version