Lebanon
செய்திகள்உலகம்

லெபனானில் நீதிபதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தில் அதிர்ச்சி!

Share

லெபனான் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீதிபதி ஒருவருக்கு எதிராக ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் மேற்கொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

முன்னதாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த வருடம் நடாத்தப்பட்டிருந்த குண்;டு வெடிப்பில் 219 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நீதிபதிக்கு எதிராகவே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்களின் இப்போராட்டத்தில், லெபனீஸ் படைகள் என்னும் குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்தச் சம்பவத்தை லெபனீஸ் படை அமைப்பு மறுத்து செய்தி வெளியிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...