20260107 152316
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தலை இழுத்தடிக்க அரசாங்கம் நாடகம் ஆடுகிறது – ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் சாடல்!

Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி, காலத்தை இழுத்தடிக்கும் ஒரு அரசியல் நாடகம் என ரெலோ (TELO) கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு, தேர்தலை நடத்துவதில் உண்மையான விருப்பம் இருந்தால், 2017-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க சட்டத்தை உடனடியாகத் திருத்தி பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும்.

எல்லை நிர்ணயம் போன்ற சிக்கலான விடயங்களை மீண்டும் தெரிவுக்குழுவிற்குள் கொண்டு வருவது, தேர்தலைத் காலவரையறையின்றித் தள்ளிப்போடுவதற்கே உதவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தரப்பினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இவ்வாறான தெரிவுக்குழுக்கள் காலத்தை வீணடிக்கும் செயல்கள் என விமர்சித்ததை அவர் நினைவுபடுத்தினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக இந்தத் தெரிவுக்குழு பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், இது பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தீர்வை நீர்த்துப்போகச் செய்யும் ஒரு முயற்சி என ரெலோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுக்களும் தெரிவுக்குழுக்களும் நீதியைத் தாமதப்படுத்தும் கருவிகள் என்பதை மக்கள் அறிவார்கள். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கத்திற்கு நேர்மை இருக்க வேண்டும், என சபா குகதாஸ் தனது ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...