39 3
இந்தியாசெய்திகள்

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

Share

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சீமான், “கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதும், பாட்டிலுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது தான் தியாகமா? கமிஷன் வாங்குவதும் லஞ்சம் பெறுவது தான் தியாகமா?

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ததும் திமுக தான். அவரை சிறையில் அடைத்து விட்டு தற்போது வரவேற்பதும் திமுக தான்.

அவர் அதிமுகவில் இருந்தால் கெட்ட திருடன், திமுகவில் இருந்தால் நல்ல திருடனா? அவர் இங்கு வந்ததும் குற்றம் அற்றவராக ஆகிவிடுவாரா?

தற்போதைய நிலையில் யார் அதிகம் கமிஷன் வாங்கி கொடுக்கிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர்” என்றார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...