39 3
இந்தியாசெய்திகள்

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

Share

இது தான் தியாகமா? செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் சீமான் ஆவேசம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. பின்னர், கடந்த ஆண்டு ஜூன் 14 -ம் திகதி விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய சீமான், “கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதும், பாட்டிலுக்கு அதிக விலை வைத்து விற்பனை செய்வது தான் தியாகமா? கமிஷன் வாங்குவதும் லஞ்சம் பெறுவது தான் தியாகமா?

செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ததும் திமுக தான். அவரை சிறையில் அடைத்து விட்டு தற்போது வரவேற்பதும் திமுக தான்.

அவர் அதிமுகவில் இருந்தால் கெட்ட திருடன், திமுகவில் இருந்தால் நல்ல திருடனா? அவர் இங்கு வந்ததும் குற்றம் அற்றவராக ஆகிவிடுவாரா?

தற்போதைய நிலையில் யார் அதிகம் கமிஷன் வாங்கி கொடுக்கிறார்களோ அவர் தான் நல்ல அமைச்சர்” என்றார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...