செட்டியார் தெரு நகைக்கடையில் கத்திக்குத்து!

IMG 20211215 WA0019

கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தனிப்பட்ட பிரச்சினையே கத்திக்குத்துக்கு காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version