images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் விழா: மெதிரிகிரிய அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி!

Share

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியை மோசடி செய்து, அதனைத் தனது கணவரின் பிறந்தநாள் விழாவிற்குப் பயன்படுத்திய மெதிரிகிரிய பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

2022 டிசம்பர் 5-ஆம் திகதி குறித்த அதிபரின் கணவருக்குப் பிறந்தநாள் விழா திட்டமிடப்பட்டிருந்தது. அன்று ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிய உணவை வழங்காமல், அந்தப் பணத்தை அதிபர் கையாடல் செய்துள்ளார்.

மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகக் கூறி போலி வவுச்சர்களைத் (Vouchers) தயாரித்து, அரசாங்க நிதியை அவர் மோசடி செய்தமை விசாரணையில் அம்பலமானது.

மாணவர்களுக்கு உணவு வழங்கும் சப்ளையரிடமிருந்து, மோசடி செய்த பணத்தைக் கொண்டு தனது கணவரின் பிறந்தநாள் விழாவிற்காகப் பால் சாதம், குக்கீஸ்கள், கட்லெட்டுகள் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை அதிபர் கொள்வனவு செய்துள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாடசாலை மேம்பாட்டுச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் வழங்கிய எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் மாகாண கல்வி அதிகாரிகள் இந்த விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, குறித்த அதிபர் கல்வி நிர்வாக சேவைத் தேர்வில் (SLAS) தேர்ச்சி பெற்று அதிகாரியாகத் தகுதி பெற்றிருந்தார். எனினும், இந்தத் தவறான நடத்தை மற்றும் நிதி மோசடி நிரூபிக்கப்பட்டதால், அவரது புதிய நியமனத்தை உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஏழை மாணவர்களின் பசியைப் போக்க அரசாங்கம் வழங்கும் நிதியைத் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தியமை கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அதிபருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...