images 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்களின் மதிய உணவுப் பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் விழா: மெதிரிகிரிய அதிபர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி!

Share

பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக அரசாங்கம் வழங்கிய நிதியை மோசடி செய்து, அதனைத் தனது கணவரின் பிறந்தநாள் விழாவிற்குப் பயன்படுத்திய மெதிரிகிரிய பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

2022 டிசம்பர் 5-ஆம் திகதி குறித்த அதிபரின் கணவருக்குப் பிறந்தநாள் விழா திட்டமிடப்பட்டிருந்தது. அன்று ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மதிய உணவை வழங்காமல், அந்தப் பணத்தை அதிபர் கையாடல் செய்துள்ளார்.

மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகக் கூறி போலி வவுச்சர்களைத் (Vouchers) தயாரித்து, அரசாங்க நிதியை அவர் மோசடி செய்தமை விசாரணையில் அம்பலமானது.

மாணவர்களுக்கு உணவு வழங்கும் சப்ளையரிடமிருந்து, மோசடி செய்த பணத்தைக் கொண்டு தனது கணவரின் பிறந்தநாள் விழாவிற்காகப் பால் சாதம், குக்கீஸ்கள், கட்லெட்டுகள் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை அதிபர் கொள்வனவு செய்துள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாடசாலை மேம்பாட்டுச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் வழங்கிய எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் மாகாண கல்வி அதிகாரிகள் இந்த விசாரணையை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, குறித்த அதிபர் கல்வி நிர்வாக சேவைத் தேர்வில் (SLAS) தேர்ச்சி பெற்று அதிகாரியாகத் தகுதி பெற்றிருந்தார். எனினும், இந்தத் தவறான நடத்தை மற்றும் நிதி மோசடி நிரூபிக்கப்பட்டதால், அவரது புதிய நியமனத்தை உடனடியாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஏழை மாணவர்களின் பசியைப் போக்க அரசாங்கம் வழங்கும் நிதியைத் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்தியமை கல்வித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அதிபருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...