sajith
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டா அரசின் நிலை இனி அந்தோகதிதான்! – சஜித் சுட்டிக்காட்டு

Share

அரச கூட்டுக்குள் உட்கட்சி மோதலைக்கூடச் சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு இன்று பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி எப்படித் தீர்க்கப்போகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இந்த அரசை அரசுக்குள் இருப்பவர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே விமல், கம்மன்பிலவின் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே, அரசுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

அரசின் நிலை இனி அந்தோகதிதான். மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

நாட்டை நேசிக்கும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி விரைவில் மலர ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...