1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய வருடத்தில் புதிய பாதையில் சஜித் அணி!!!

Share

புதிய வருடத்தில் புதிய பாதையில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் தீர்வுகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி நுழையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்திற்கு மிகவும் தோல்வியடைந்த வருடமாக இந்த வருடம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நாட்டில் பொது மக்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

ஜனவரி 2021 முதல் டிசம்பர் 2021 வரையிலான விலையை ஒப்பிடுகையில், 1 கிலோ போஞ்சி ரூ.210ல் இருந்து ரூ.440 ஆகவும், கரட் ரூ.160ல் இருந்து ரூ.560 ஆகவும், 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.420ல் இருந்து 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

புதிய வருடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், நிதி நெருக்கடியைக் கடப்பதற்கும் ஒரு திட்டத்துடனும் தெளிவான பார்வையுடனும் புதிய ஆண்டிற்குள் காலடி எடுத்து வைப்பார்கள் .

எதிர்காலத்தில் தேசத்தை உயர்த்துவதற்கான செயற்திட்டத்தை முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...