SAARC
செய்திகள்அரசியல்இலங்கை

பீகாரில் சார்க் பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச மாநாடு: இலங்கையின் ஊடக அடக்குமுறை குறித்து விரிவான விவாதம்!

Share

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிலவும் ஊடக அடக்குமுறைகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்கான சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்றத்தின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு நாளை (04) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

பீகார் மாநிலத்தின் நாளந்தா திறந்த பல்கலைக்கழகம் (Nalanda Open University) 2026 ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

பீகார் மாநில ஆளுநர் கங்கா பிரசாத் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மொரீஷியஸ் சர்வதேச கலாசார தூதர் சரிதா புத்து, சார்க் பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச தலைவர் ராஜு லாமா (நேபாளம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலைநாட்டவும், ஊடகப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்.

குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலமாகப் பதிவாகியுள்ள ஊடக அடக்குமுறைகள், கருத்துச் சுதந்திர மீறல்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்படும் தடைகள் குறித்து சார்க் பத்திரிகையாளர்கள் மன்றம் விரிவாகக் கலந்துரையாடவுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி செய்தி வாசிப்பாளர் சித்ரா திரிபாதி உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ஆறு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றுத் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...