russian
செய்திகள்உலகம்

வியூகம் மாற்றி தாக்கும் முனைப்பில் ரஸ்யா!!

Share

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியப் படைகள் குண்டுகள் வீசி தாக்குதலை தொடங்கியது.

அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு துருக்கி ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று துருக்கியில் ரஷியா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

இதற்கிடையே சுமி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷியா, மனிதாபிபமான பாதையை திறந்துவிட்டது.

நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இன்று யாரும் எதிர்பாராத வகையில் மேற்கு பகுதியில் உள்ள இவானே-பிரான்கிவ்ஸ்க், லட்ஸ்க் ஆகிய நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நகரங்களில் உள்ள விமான நிலையம் அருகே தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ரஷிய படைகள் கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகளைத்தான் தாக்கி வந்தன.

தற்போது மேற்கு எல்லையில் மிக தொலைவில் உள்ள நகரங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியன் மூலம் ரஷியா போருக்கான புதிய திசையை குறிக்கலாம் என கருதப்படுகிறது.

#WorldNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1647574276 3019
செய்திகள்இந்தியா

பகவத் கீதையின் செய்தியை உலகமயமாக்கும் முயற்சி: 50க்கும் மேற்பட்ட தூதரகங்கள் மூலம் முன்னெடுக்கப்படுகிறது!

பகவத் கீதையின் செய்தியை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சகம் முயற்சிகளை...

DSC 4271
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலை யாத்திரை: பொலித்தீன் இல்லாத தூய தளமாகப் பராமரிக்கத் திட்டம்!

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை (Sri Pada Pilgrimage) அடிப்படையாகக்...

DSC 4271
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியா சிங்கர் காட்சியறையில் பயங்கர தீ விபத்து: முழுமையாக எரிந்து சேதம்!

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் (Singer) இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை (நவம்25) காலை...

25 68ee64d88d4b3
செய்திகள்இலங்கை

இலங்கையில் பலத்த மழை நீடிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் இன்று (நவம் 25) புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக...