807194 5sermsph4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலையில் கடல் சீற்றம்: டச் பே கடற்கரையில் சிவப்பு எச்சரிக்கை – மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்!

Share

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடற்பரப்பு இன்று மிகக்கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை டச் பே (Dutch Bay) கடற்கரையில் அலைகளின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் கடல் நீர் அதிகப்படியாக உள்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். வீரநகர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தமது வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் போதிய இடவசதி இல்லாததால், அவற்றை வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

படகுகளை வீதியோரங்களுக்குக் கொண்டு வருவது சிரமமாக இருந்தாலும், வேறு வழியின்றிப் பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எதிர்வரும் ஜனவரி 10-ஆம் திகதிக்குப் பின்னரே கடலின் தன்மையை ஆராய்ந்து மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...