807194 5sermsph4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலையில் கடல் சீற்றம்: டச் பே கடற்கரையில் சிவப்பு எச்சரிக்கை – மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம்!

Share

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடற்பரப்பு இன்று மிகக்கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை டச் பே (Dutch Bay) கடற்கரையில் அலைகளின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் கடல் நீர் அதிகப்படியாக உள்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். வீரநகர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், தமது வாழ்வாதாரமான படகுகளைப் பாதுகாக்கப் போதிய இடவசதி இல்லாததால், அவற்றை வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

படகுகளை வீதியோரங்களுக்குக் கொண்டு வருவது சிரமமாக இருந்தாலும், வேறு வழியின்றிப் பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எதிர்வரும் ஜனவரி 10-ஆம் திகதிக்குப் பின்னரே கடலின் தன்மையை ஆராய்ந்து மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
01 13
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிய இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பான பயணம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பினருக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில்,...

p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...