இன்று முதல் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலை!!!

petrol 1 1

இன்று (21) முதல் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 95 ஒக்டேன் எக்ஸ்ரா பெட்ரோல் பிரீமியம் லீட்டர் ஒன்றின் புதிய விலை 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 159 ரூபாவாகும்.

77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

மேலும் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவில் இருந்து 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version