dipper 960x720 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்ணை கடத்திச் சென்ற ரிப்பர் வாகனம் விபத்து!

Share

பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் ரிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் டிலக்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இளம்பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த ரிப்பர் வாகனத்தில் கரவெட்டித்திடல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாகவும், குறித்த வாகனத்தை குடும்பத்தினர் துரத்தி சென்றபோதே வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
received 3346662718994367
செய்திகள்இலங்கை

விசுவமடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணிக்கு இராணுவத்தினர் இடையூறு – நிர்வாகத்தினர் கோரிக்கை

முல்லைத்தீவு, விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்காக...

25 68fe267ebcb42
செய்திகள்இலங்கை

பெருந்தோட்டப் பகுதிகளை காடுகளாக்கி மக்களை வெளியேற்றும் சதி: சந்தேகம் எழுப்பும் யட்டியந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்

பெருந்தோட்ட பகுதிகளை காடுகளாக்கி அந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருவதாகவும்...

1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...