எதிர்காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்!

Tilvin Silva 700x375 1

எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்றையதினம் (27) கொழும்பில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் உர இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமையால் நெல் அறுவடை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளையில் எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை சந்தையில் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Exit mobile version