24 661dc3f60f4aa
இந்தியாசெய்திகள்

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும்

Share

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும்

இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் இன்று கோரியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய மனுவில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாட்டில் வைத்து சங்கத்தின் பிரதிநிதிகள் ராகுல் காந்தியிடம் இந்த மனுவை அளித்துள்ளனர்.

நாடு திரும்பிய நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்ற குழு ஒன்றை அமைத்தல் மற்றும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த மனுவில் சங்கப்பிரதிநிதிகள் பட்டியலிட்டுள்ளனர்.

இந்திய அரசின் முழு மறுவாழ்வு வாக்குறுதியின் கீழ் இந்தியாவுக்கு வந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முறையாக மறுவாழ்வு அளிக்கப்படாததால், சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சுமார் 25 இலட்சம் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளையும் உரிமைகளையும் தீர்க்க இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை. எனவே இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறித்த மனுவில் தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...