ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைப்பு! – நிதி அமைச்சர் (காணொலி)

WhatsApp Image 2021 11 12 at 2.06.30 PM

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கால எல்லை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி தொடர்ச்சியாக 10 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக (2 தடவைகள்) செயற்பட்டிருந்தால் மட்டுமே அந்த உறுப்பினர் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்.

இதுவரை 5 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால் ஓய்வூதியம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பதவி வகிப்பவருக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என நிதி அமைச்சர் அறிவித்தார் .

அத்துடன், அரச ஊழியர்களுக்கான எரிபொருள் மானியம் 5 வீதத்தாலும், தொலைபேசி கட்டணங்கள் 25 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com

#SriLankaNews

Exit mobile version