WhatsApp Image 2021 12 12 at 2.04.25 PM
செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கை

இந்திய தூதுவரிடம் வலிமேற்கு தவிசாளர் முன்வைத்த கோரிக்கை!!

Share

இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்குமாறு, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சங்கானை கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற சுதேச சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது நாட்டின் கடல் எல்லைக்குள் உட்புகுந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எமது நாட்டின் கடல் வளங்கள் அருகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் எமது நாட்டு மீனவர்களின் தொழில் முதல்கள் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் சிக்குண்டு சேதமடைகின்றன. இதனால் இலங்கை மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இதுவரை எமது மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மீனவர்கள் தொழிலை கைவிடும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை இன்று நேற்று மட்டும் இடம்பெறவில்லை, அன்று தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. இந்திய இழுவைப் படகுகளால் அதிகம் பாதிக்கப்படுவது நமது வடபகுதி மீனவர்களே.

தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஒரு நல்லெண்ணம் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது.

எனவே இதனை தடுப்பதற்கு தாங்கள் தங்களாலான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் – என்றார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1749716262 image 42525c8345
அரசியல்இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு இறுதி அறிக்கையை விரைவில் வெளியிடுவதற்கு அரசாங்கம் உறுதி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை...

ranil wickremesinghe 1540622362 tile 1652346881 1652542509 1658301653
செய்திகள்இலங்கை

இந்தியா பயணத்தின்போது: ரணில் விக்கிரமசிங்க தம்பதியினர் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவுக்குச் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர்...

250925 AKD UNGA
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாத வலைக்குள் நாடு சிக்காது’: இலங்கை தினக் கொண்டாட்டம் மூலம் நல்லிணக்கம் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்படும்...

archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...