New Project 2
செய்திகள்இலங்கை

அத்தியாவசியமற்ற பொருட்கள் மீதான இறக்குமதி வரையறை நீக்கம்!

Share

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரையறை இன்று (01) முதல் நீக்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, போதுமான அளவு அந்நிய செலாவணி காணப்படுவதால் எதிர்வரும் 06 மாதங்களுக்கு தேவையற்ற வகையில் பொருட்களை களஞ்சியப்படுத்த வேண்டாமெனவும் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

‘பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டல்’ வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே, ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், தேவைக்கேற்ப மட்டுமே இறக்குமதியை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் டொலருக்கான பற்றாக்குறை நிலவியதால் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற 623 பொருட்களுக்கு எதிராகக் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் மத்திய வங்கியினால் கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...