images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களின் காணிகளை விடுவிப்பதே முக்கியம்: தையிட்டி விகாரை மற்றும் PTA குறித்து அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!

Share

தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தொடர்பில் அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்:

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டுவதற்குத் தமது தரப்பு தயாராகவே உள்ளது. ஆனால், தற்போது சட்டமுரணாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

போராட்டத்தின் நோக்கம்: மக்கள் விகாரையை எதிர்க்கவில்லை, மாறாகத் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்ட விதத்தையே எதிர்க்கின்றனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றுக்குத் தீர்வை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்களைப் போலன்றி, இனவாதத்தைத் தடுக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றி அமுல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் தற்போது எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்த அவர் “யாழ்ப்பாணத்திற்கு வரும் ஜனாதிபதி, எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் வீதிகளில் நடந்து செல்ல முடியுமான சூழல் இருக்கும்போது, இன்னும் எதற்காகப் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது? அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவரப்பட வேண்டிய அவசியம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பினார்.

 

 

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...