பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும், நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற மாணவர்களை குறித்த காலத்துக்குள் தமக்குரிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment