skynews calais migrants 5594324
செய்திகள்உலகம்

அகதிகள் படகு மூழ்கி 31 பேர் பலி! – பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Share

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற குறித்த படகு மூழ்கியதில் படகில் பயணித்த 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது. விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுமி ஆகியோர் உட்பட 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குறித்த பகுதியில் உடல்களை பார்த்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலின்படி மேட்டுப்பணியினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற மீட்புப்படையினரால் நீரில் மூழ்கியவர்களையும் உயிரிழந்த உடல்களையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில கால்வாய் ஊடாக ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில். குறித்த பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான படகு விபத்து இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

skynews dover migrants 5594079

#World

Source- SkyNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...