skynews calais migrants 5594324
செய்திகள்உலகம்

அகதிகள் படகு மூழ்கி 31 பேர் பலி! – பிரதமர் அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Share

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது கலேஸ் பகுதி அருகே புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற குறித்த படகு மூழ்கியதில் படகில் பயணித்த 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது. விபத்தில் 5 பெண்கள், ஒரு சிறுமி ஆகியோர் உட்பட 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் குறித்த பகுதியில் உடல்களை பார்த்த மீனவர் ஒருவர் வழங்கிய தகவலின்படி மேட்டுப்பணியினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற மீட்புப்படையினரால் நீரில் மூழ்கியவர்களையும் உயிரிழந்த உடல்களையும் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடத்தல்காரர்கள் என தெரிவிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில கால்வாய் ஊடாக ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில். குறித்த பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான படகு விபத்து இது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அவசரக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

skynews dover migrants 5594079

#World

Source- SkyNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...