IMG 6762 750x375 1
செய்திகள்இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்பு !

Share

மட்டக்களப்பு பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக சிறுமி ஒருவர் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் .

குறித்த சிறுமி மட்டக்களப்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08கல்வி பயிலும் 13வயது சிறுமி ஆவார்.

குறித்த சிறுமியின் பெற்றோர் நேற்று மாலை வெளியில் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரியும் வீட்டிலிருந்துள்ளனர். சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது தமக்கை குளியலறையிலிருந்ததாகவும், வெளியில் வந்து பார்த்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தூக்கில் தொங்கிய நிலையிலே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...